Wednesday 5 August 2015

பட்டாசு தொழிலாளர்கள் குடும்பத்துக்கு ரூ1லட்சம் நிதியுதவி - முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

 சாத்தூரில் சாலை விபத்தில் சிக்கி பலியான பட்டாசு தொழிலாளர்கள் 6 பேரது குடும்பத்தக்கும் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், இ. குமாரலிங்கபுரம் கிராமத்தில் தனியார் பட்டாசு அலை ஒன்று இயங்கி வருகிறது.இத் தொழிற்சாலையில் பணி புரிந்து வந்த தொழிலாளர்கள் 15.7.2015 அன்று மாலை பணி முடித்து வீடு திரும்பும் போது, அவர்கள் சென்ற வாகனம் சிவகாசி வட்டம், விஸ்வநத்தம் கிராமம் உட்கடை, பாறைப்பட்டி கிராமத்தின் சாலை ஓரத்தில் தடம் புரண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.டீசல் டேங் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில், வாகனத்தில் பயணம் செய்த கீழத்திருத்தங்கல் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மனைவி காளியம்மாள், கருப்பையா என்பவரின் மனைவி இருளம்மாள், ஐசக் ராஜா என்பவரின் மனைவி பரமேஸ்வரி, முனியசாமி என்பவரின் மனைவி விஜயகுமாரி, குருசாமி என்பவரின் மனைவி கனகம் மற்றும் சிவகாசியைச் சேர்ந்த மதியழகன் என்பவரின் மனைவி முருகேஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்செய்தியை அறிந்து மிகவும் துயரமடைந்தேன். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் எட்டு நபர்கள் தீக்காயமடைந்தனர் என்ற செய்தியை அறிந்து வருத்தமடைந்தேன். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50,000/- ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.



பரவை முனியம்மாவின் பரிதாப நிலை - முதல்வர் ஜெ., 6 லட்சம் நிதியுதவி

திறமை இருந்தால் 60 வயதிலும் சினிமாவில் சாதிக்க முடியும் என்று நிரூபித்தவர் பரவை முனியம்மா. கோவில் திருவிழாக்களில் நாட்டுப்புற பாடல்களை பாடிக்கொண்டிருந்தவரை தூள் படத்தில் அறிமுகப்படுத்தினார் தரணி. "ஏய் சிங்கம்போல நடந்து வாரான் செல்லப் பேராண்டி..." என்ற பாடலோடு அறிமுகமாகி 73 படங்களில் பாடிவிட்டும், நடித்து விட்டும் இன்று பரவை கிராமத்தில் உள்ள சிறிய வீட்டுக்குள் முடங்கிவிட்டார்.
பத்து மாதத்திற்கு முன்பு கணவர் இறந்து விட்டார். சமீபத்தில் மருமகள் இரண்டு குழந்தையை தவிக்கவிட்டு இறந்து விட்டார். மகனுக்கு மனநிலை சரியில்லை. மூன்று பேரையும் தள்ளாத வயதில் கவனிக்க வேண்டிய பொறுப்பு பரவை முனியம்மாவுக்கு. தற்போது அவரால், பாடவும் ஆடவும் முடியாததால் ரேஷன் அரசி வாங்கி காலத்தை தள்ளுகிறார். சம்பாதித்தபோது கட்டிய வீட்டை இரண்டாக பிரித்து முன்பகுதியை வாடகைக்கு விட்டு அந்த வருமானத்தில் கஷ்ட ஜீவனம் நடத்துகிறார். பரவை முனியம்மாவின் இறுதிக் காலம் இத்தனை வறுமையாகி போனது திரையுலகினருக்கு அதிர்ச்சி அளிக்கிறது. அவர் பீக்கில் இருந்த காலத்தில் அவர் சம்பாதித்த பணம் எங்கே போனது என்ற கேள்விக்கு பரவை முனியம்மாவுக்கே விடை தெரியவில்லை. "யாரையும் குறை சொல்லவிரும்பல எல்லாம் என் தலைவிதி" என்று மட்டும் சொல்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட பரவை முனியம்மா மதுரை தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலையை அறிந்த தனுஷ் அவருக்கு 5 லட்சம் ரூபாய் கொடுத்து உதவ முன்வந்திருக்கிறார். விஷால் அவரது மருத்துவ செலவை ஏற்க முன்வந்திருக்கிறார். இதேப்போல் சிவகார்த்திகேயனும் உதவி வருகிறார்.இந்நிலையில் பரவை முனியம்மாவின் பரிதாப நிலையை பார்த்து அவருக்கு உதவ முன் வந்துள்ளது தமிழக அரசு. பரவை முனியம்மாவிற்கு ரூ.6 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அவரது மருத்துவ சிகிச்சைக்கான தொகையை எம்.ஜி.ஆர்., அறக்கட்டளை வழங்கும் எனவும் என்றும், குடும்பத்திற்கு மாதந்தோறும் ரூ.6000 வழங்கப்படும் எனவும் ஜெ., அறிவித்துள்ளார்.
Keywords: 
சாலை விபத்து, 
முதல்வர் நிதியுதவி, 
ரூ.1 லட்சம் நிதியுதவி, 
முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

No comments:

Post a Comment